கொரோனா தொடர்பான மத்திய அரசின் "ஆரோக்ய சேது" செயலி

0 3236

கொரோனா தொடர்பான மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நான்கு நாட்களில் 50 லட்சத்திற்கும் மேலானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஸ்மார்ட்போனில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலியை திறந்தால் நாம் இருக்கும் பகுதியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா என பயனாளர் அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை, ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments